அண்மைய செய்திகள்

recent
-

பெண்கள் அரசியல் ரீதியாக முன்னுக்குவர வேண்டும் -ரூபவதி கேதீஸ்வரன்

பெண்கள் அரசியல் ரீதியாக முன்னுக்குவர வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பான மகா சக்தி மகளிர் சம்மேளனத்தினால் நடாத்தப்படட சர்வதேச மகளிர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் 

 அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் மகளிர் என்றால் உண்மையிலேயே நாங்கள் பெண்ணியம் கதைப்பதல்ல பெண்களும் ஆண்களும் இணைந்தது தான் ஒரு சமூகம் அல்லது அடிப்படையாக ஒரு குடும்பம் அந்தவகையில் இருபாலாரும் இணைந்து அவரவர்களுடைய பங்களிப்பை சரியாக வழங்குகின்ற போது ஒரு ஆரோக்கியமான குடும்ப கட்டமைப்பை நாங்கள் அமைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும் அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையிலே பல்வேறு குடும்பங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் பெண்கள் பல்வேறு விதமாக பாதிக்கப்படுகின்ற சம்பவங்கள் அனுதினமும் இடம்பெறுகின்றது இது தொடர்பாக நாங்கள் உத்தியோகத்தர்கள் மூலமாகவும் பத்திரிக்கை செய்திகள் மூலமாகவும் அறிகின்றோம்

 கிளிநொச்சி மாவட்டம் மட்டுமல்ல பல்வேறு பகுதிகளிலும் இந்த விடயங்கள் இருப்பதற்கு காரணம் உண்மையில் பெண்மையை சரியான முறையிலே மதிக்காதது தான் அடிப்படை காரணமாக அமைந்துள்ளது இங்கிருக்கின்ற பெண்களாகிய நீங்களும் பல்வேறு வேதனைகளையும் வலிகளையும் தாண்டி சாதனை பெண்களாக நீங்கள் மிளிரவேண்டும் என்றும் குறிப்பாக இந்த மகா சக்தி நிறுவனமானது மாவட்டத்தில் ஒரு பெயர் சொல்லக்கூடிய நிறுவனமாக மாறவேண்டும் என்றும் குறிப்பாக இந்த மகா சம்மேளனத்தின் செயற்பாடுகள் சிறப்பாக உள்ளது இந்த அமைப்பில் ஒரு அரசியல் பிரமுகரையும் நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள் அந்தவகையிலே பெண்கள் அரசியல் ரீதியாகவும் நாங்கள் முன்னுக்குவரதான் வேண்டும்.

 எனவே பெண்களால் அனைத்து துறையிலும் சாதிக்க முடியும் என்பதற்கு மகா சக்தி நிறுவனமும் இன்னும் சிறந்து விளங்க வேண்டும் என்று அனைவரையும் வாழ்த்தி உங்களுடைய கால்களில் நீங்கள் நிற்பதனூடாக உங்களுடைய பொருளாதாரம் மேம்பட தக்கதாக இந்த மகாசக்தி நிறுவனம் உங்களை தொடர்ந்தும் வழிநடத்த பாராட்டுவதாகவும் தெரிவித்தார் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பான மகா சக்தி மகளிர் சம்மேளனத்தினால் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு விவேகானந்தநகர் பகுதியில் இடம் பெற்றது நிகழ்வில் குறித்த அமைப்பில் சேவையாற்றிவரும் பெண்கள் கௌரவிக்கப்பட்டதோடு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது





























பெண்கள் அரசியல் ரீதியாக முன்னுக்குவர வேண்டும் -ரூபவதி கேதீஸ்வரன் Reviewed by Author on March 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.