அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஊரடங்கு சட்டம் அமுல்-வீடுகளில் முடங்கியுள்ள மக்கள்.

நாட்டில் நேற்று சனிக்கிழமை (2) மாலை 06 மணி முதல் நாளை திங்கட்கிழமை (4ஆம்) திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (3) காலை முதல் மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. -மன்னார் நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

 ஊரடங்கு நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதோடு, ஏனைய சேவைகள் அனைத்தும் மன்னார் மாவட்டத்தில் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உணவகங்கள்,வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ள தோடு, அரச ,தனியார் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் முற்றாக ஸ்தம்பித மடைந்துள்ள நிலையில் மக்கள் முற்றாக வீடுகளில் முடங்கியுள்ளனர். வீதிகள் மற்றும் பொது இடங்களில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் உரிய அனுமதியின்றி வீதிகளில் நடமாடுவார் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
                 











மன்னாரில் ஊரடங்கு சட்டம் அமுல்-வீடுகளில் முடங்கியுள்ள மக்கள். Reviewed by Author on April 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.