மன்னாரில் ஊரடங்கு சட்டம் அமுல்-வீடுகளில் முடங்கியுள்ள மக்கள்.
ஊரடங்கு நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதோடு, ஏனைய சேவைகள் அனைத்தும் மன்னார் மாவட்டத்தில் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உணவகங்கள்,வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ள தோடு, அரச ,தனியார் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் முற்றாக ஸ்தம்பித மடைந்துள்ள நிலையில் மக்கள் முற்றாக வீடுகளில் முடங்கியுள்ளனர்.
வீதிகள் மற்றும் பொது இடங்களில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் உரிய அனுமதியின்றி வீதிகளில் நடமாடுவார் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
மன்னாரில் ஊரடங்கு சட்டம் அமுல்-வீடுகளில் முடங்கியுள்ள மக்கள்.
Reviewed by Author
on
April 03, 2022
Rating:

No comments:
Post a Comment