அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் லியோ இளைஞர் கழகத்தினரால் இரத்ததான முகாம்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இரத்ததானம் செய்யுமாறு மன்னார் பொது வைத்தியசாலை அவசர கோரிக்கையை முன் வைத்துள்ள நிலையில் லியோ இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இடம் பெற்றது

 லியோ இளைஞர் கழகத்தின் ஆலோசகர் லேடி லயன் றெஜினா இராமலிங்கத்தின் ஆலோசனைக்கு அமைவாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், இரத்த வங்கி மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள், மற்றும் வைத்தியர் ஆகியோரின் உதவியுடனும் வாழ்வுக்கான தன்னார்வ தொண்டர்கள் மற்றும் றகாமா நிறுவனத்தின் அனுசரணையுடனும், குறித்த இரத்ததான முகாம் இடம் பெற்றது. 

 இதன் போது இளைஞர், யுவதிகள், அருட்சகோதரிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர் அதே நேரம் இரத்ததானம் வழங்கியவர்களை கௌரவிக்கும் வகையிலும் சுற்றாடல் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாகவும் பயன் தரும் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











மன்னார் லியோ இளைஞர் கழகத்தினரால் இரத்ததான முகாம். Reviewed by Author on April 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.