அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் இன்றும் மின்தடை!

நாட்டில் இன்றும்(சனிக்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதன்படி, A முதல் F வரையான வலயங்களில் காலை 8மணிமுதல், நண்பகல் 12மணிவரையான காலப்பகுதியில் 4 மணிநேரமும், மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேரமும், இரவு 9 மணிமுதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் ஒன்றரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. 

 G முதல் L வரையான வலயங்களில் மதியம் 12 மணிமுதல் மாலை 4 மணிவரையான காலப்பகுதியில் 4 மணிநேரமும், மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேரமும், இரவு 10.30 முதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில் ஒன்றரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

நாட்டில் இன்றும் மின்தடை! Reviewed by Author on April 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.