அண்மைய செய்திகள்

recent
-

ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்களுக்கு ‘சல்மோனெல்லா’ வைரஸ்!

ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்கள் ‘சல்மோனெல்லா’ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்பது சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. இந்த சாக்லேட்டுகள் 113 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சால்மோனெல்லா பெல்ஜிய சாக்லேட் மூலம் பரவுகிறது. ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இந்த சாக்லேட்டை சாப்பிட்ட 150 குழந்தைகளுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக 11 நாடுகளில் தொற்று பதிவாகியுள்ளது. 

லண்டனில் அதிகபட்சமாக 65 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் நோய்த்தாக்கம் அதிகமாக உள்ளது. இதில் 9 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. சால்மோனெல்லா நோய் என்பது பாக்டீரியா தொற்று ஆகும். இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடல்களில் காணப்படுகிறது. டைப்பாய்ட் காய்ச்சலும் இந்த பாக்டீரியா மூலம்தான் ஏற்படுகிறது. நோய்த் தொற்று ஏற்பட்ட 2 மணி நேரத்தில் காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும். 

தொடக்கநிலையிலே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் தீவிர நிலைக்கு செல்லாமல் தடுக்க முடியும். பசியின்மை, உடல்வலி, 104 டிகிரி வரை காய்ச்சல், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, தலைவலி உள்ளிட்டவைகள் இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். இந்த நோய் தரமற்ற உணவு மூலம் பரவுகிறது. குறிப்பாக மாசடைந்த உணவுப் பொருட்கள், பச்சையான பால் பொருட்கள், நன்கு வேக வைக்காத இறைச்சி ஆகியவைகள் மூலம் பரவுகிறது. தற்போது சாக்லேட் மூலம் இந்த நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்களுக்கு ‘சல்மோனெல்லா’ வைரஸ்! Reviewed by Author on April 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.