அண்மைய செய்திகள்

recent
-

ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உயிரிழப்பு

அக்கரைப்பற்று - இறக்காமம் - வாங்காமம் பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறார்கள், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிற்பகல் ஆற்றில் நீராடச் சென்ற 2 சிறுவர்களும், நீரில் இழுத்துச் செல்லப்பட்டதை அடுத்து, பிரதேசவாசிகள் அவர்களை மீட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

 இந்தநிலையில், அவர்கள் உயிரிழந்தாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியும், 6 வயது சிறுவனும் இதன்போது உயிரிழந்ததாகவும், சம்பவம் தொடர்பில் இறக்காமம் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிச் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.


ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உயிரிழப்பு Reviewed by Author on May 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.