அண்மைய செய்திகள்

recent
-

எரிபொருள் வாங்க இந்தியா மட்டுமே உதவியிருக்கிறது - இலங்கை பிரதமர்

இலங்கை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராகத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடி, போராட்டங்கள் காரணமாக இலங்கையில் எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவையின் விலை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதிலிருந்து மீண்டுவர இலங்கை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

உலக நாடுகளிடமும் உதவி கேட்டு இலங்கை கோரிக்கை விடுத்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு கடனுதவி கோரியுள்ளது. ஆனால், இலங்கைக்கு இதுவரை சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்கவில்லை. இந்நிலையில், இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் எங்களுக்கு எரிபொருள் வாங்க பண உதவி வழங்கவில்லை என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியா எரிபொருள், மருந்துப்பொருட்கள், பணம் என 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடனுதவி வழங்கியிருக்கிறது.


எரிபொருள் வாங்க இந்தியா மட்டுமே உதவியிருக்கிறது - இலங்கை பிரதமர் Reviewed by Author on June 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.