தலைமன்னாரில் இருந்து இந்தியாவிற்கு கடத்திச் செல்ல இருந்த உயர் ரக ஆடுகள் 5 மீட்பு.
குறித்த உயர் ரக ஆடுகள் இந்தியாவுக்கு கடத்தி செல்லப்படும் நோக்கில் கால்கள் கட்டப்பட்டு கிடந்ததன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது ஆடுகளை காணவில்லை என்றும் குறித்த ஆடுகள் தலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் இருப்பதை அறிந்து உரிமை கோரியுள்ளார்.
-இதனையடுத்து நேற்று புதன்கிழமை (8) மன்னார் நீதி மன்றில் குறித்த சம்பவத்தை தலைமன்னார் பொலிஸார் முற்படுத்தினர்.
இதன் போது உரிமையாளரின் ஆவணங்களை பரிசீலித்த நீதவான் ஆவணங்களில் தெளிவில்லாத தன்மை குறித்து சரியான ஆவணங்களை நீதிமன்றிற்கு முற்படுத்துமாறும் அது வரை ஆடுகள் தலை மன்னார் பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பில் பராமரிப்பை மேற்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டதை அடுத்து குறித்த ஆடுகள் தலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு பராமரிக்க பட்டுகின்றது.
-மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமன்னாரில் இருந்து இந்தியாவிற்கு கடத்திச் செல்ல இருந்த உயர் ரக ஆடுகள் 5 மீட்பு.
Reviewed by Author
on
June 09, 2022
Rating:

No comments:
Post a Comment