அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நீண்ட நாட்களின் பின்னர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகம்.

மன்னார் நகரில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீண்ட நாட்களின் பின்னர் இன்று வியாழக்கிழமை (9) காலை முதல் வாகனங்களுக்கான டீசல் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. நீண்ட நாட்களாக மன்னாரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு டீசல் எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை.இதனால் வாகன உரிமையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். மேலும் தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கும் டீசல் இல்லாமையினால் பேருந்து உரிமையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

 இந்த நிலையில் மன்னார் நகர் பகுதியில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் வாகனங்களுக்கான டீசல் எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. மேலும் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (9) காலை முதல் மண்ணெண்ணை வழங்கப்பட்டது. குடும்ப அட்டை பரிசீலிக்கப்பட்டு 500 ரூபாவிற்கு மண்ணெண்ணை வழங்கப்பட்டது. மேலும் பெட்ரோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









மன்னாரில் நீண்ட நாட்களின் பின்னர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகம். Reviewed by Author on June 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.