அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அச்சங்குளம் பகுதியில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை (9) காலை 11 மணியளவில் சுனாமி ஒத்திகை நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அச்சங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம், அருகங்குண்று போன்ற கடற்கரையோர பிரதேசங்களில் எதிர் காலத்தில் சுனாமி தொடர்பான அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது குறித்த அனர்த்தங்களில் இருந்து மக்களை விழிப்பூட்டுவதற்கும் அது சம்பந்தமான அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான ஒத்திகை நிகழ்வு இன்று (9) காலை 11 மணி தொடக்கம் 1 மணி வரை நடைபெற்றது.

 குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலகம்,மன்னார் பிரதேச செயலகங்கள்,இராணுவம்,பொலிஸ்,வேல்ட் விஷன்,அனர்த்த முகாமைத்துவ பிரிவு சென் ஜோன் ஆம்புலன்ஸ்,செஞ்சிலுவை சங்கங்கள் உட்பட பல நிறுவனங்கள் இணைந்து குறித்த ஒத்திகை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் மா. ஸ்ரீஸ்கந்த குமார் ,உட்பட வைத்தியர்கள் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் குறித்த சுனாமி ஒத்திகை நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது













மன்னார் அச்சங்குளம் பகுதியில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை. Reviewed by Author on June 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.