அண்மைய செய்திகள்

recent
-

பெற்றோல் கப்பலிலிருந்து இறக்கும் பணி துரிதப்படுத்தப்படும்-எரிசக்தி அமைச்சு

இன்று (19) முதல் பெற்றோலிய சேமிப்பு முனையம், ரயில்கள் மற்றும் டிரக்குகள் மூலம் கிராமிய டிப்போக்களுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (18) வரை இலங்கைக்கு வந்த 02 டீசல் கப்பல்களிலிருந்து எரிபொருள் இறக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்புத் துறைமுகத்தில் மற்றுமொரு டீசல் கப்பலை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்தன. 

 அத்துடன், நேற்றைய தினம் நாட்டுக்கு வந்த பெற்றோல் கப்பலின் மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டதாகவும், அவற்றை இறக்கும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும், தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் ஊடாக எரிபொருள் வெளியீடு எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. எனவே, சிபெட்கோ பெற்றோல் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் அனைத்து வாகனங்களும் அகற்றப்பட வேண்டும் என அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


பெற்றோல் கப்பலிலிருந்து இறக்கும் பணி துரிதப்படுத்தப்படும்-எரிசக்தி அமைச்சு Reviewed by Author on July 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.