அண்மைய செய்திகள்

recent
-

போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – சிபெட்கோ அறிவிப்பு

தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யக்கூடிய வகையில், டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருள்களும், கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையததின் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து எரிபொருளை உற்பத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதன்படி டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களும் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல எரிபொருள் களஞ்சிய முனையங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எனவே, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அக்கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – சிபெட்கோ அறிவிப்பு Reviewed by Author on August 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.