மின்வெட்டு கால எல்லை நீடிப்பு?
எவ்வாறாயினும், இன்றும் நாளையும் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்கள் மட்டுமே மின்வெட்டு அமுலாகும் என நேற்று (14) பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்தது. எனினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு மின்வெட்டு நேர மாற்றத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது.
இன்று காலை நுரைச்சோலை அனல்மின் நிலையம் திடீரென பழுதடைந்த தையடுத்து, நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது தொகுதி செயலிழந்துள்ளதாகவும், தொழில்நுட்ப ஊழியர்கள் தற்போது கோளாறைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதேவேளை, மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது தொகுதியில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனல்மின் நிலையத்தின் மூன்றாவது தொகுதி தொடர்ந்து இயங்குவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், மின்சார விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு முனையம் மற்றும் பிற எரிபொருள் மின்நிலையங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு கால எல்லை நீடிப்பு?
Reviewed by Author
on
August 15, 2022
Rating:

No comments:
Post a Comment