அரசாங்கம் தலையிட்டால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியும் : பேக்கரி உரிமையாளர்கள்
இப்போது ஒரு முட்டை ரூ.65க்கு விற்கப்படுகிறது. கோதுமை மாவின் விலை ஒவ்வொரு நாளும் சீராக ஏறிக்கொண்டிருக்கிறது. வெண்ணெயின் சந்தை விலை நிச்சயமாக எங்களால் எட்ட முடியாததாக இருக்க்கிறது. இந்தியாவில் முட்டை ஒன்றின் விலை ரூ. 18. அரசு அவற்றை இறக்குமதி செய்து வாங்கினால் பாணின் விலையை 30 முதல் 50 ரூபாய்வரை குறைக்க முடியும்
சந்தையில் கோதுமை மாவின் விலையில் கட்டுப்பாடு இல்லை. சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி டீலர்கள் மற்றும் ஏஜென்சிகள் தங்கள் விருப்பப்படி விலையை உயர்த்துகிறார்கள். எனவே, பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான மூலப்பொருட்களை நியாய விலையில் வழங்கினால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கம் தலையிட்டால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியும் : பேக்கரி உரிமையாளர்கள்
Reviewed by Author
on
August 14, 2022
Rating:

No comments:
Post a Comment