அண்மைய செய்திகள்

recent
-

அகில இலங்கை ரீதியில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்ட மாணவன் முதலாமிடம்.

2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று (28) திகதி மாலை வெளியான நிலையில் இம்முறை 1,71,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் (Biological Science) தேசிய ரீதியில் மட்டக்களப்பு கல்லடியில் வசித்துவரும் தமிழ்வண்ணன் துவாரகேஸ் எனும் மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். 

 உயிரியல் விஞ்ஞானத்தில் (Biological Science) தமிழ் மொழியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற துவாரகேஸ் வைத்தியர்களான காரைதீவு , மண்டூரை சேர்ந்த திரு.திருமதி தமிழ்வண்ணன் தம்பதியினரின் மூத்த மகனானகவும், மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புனித மிக்கல் கல்லூரியின் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.\






அகில இலங்கை ரீதியில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்ட மாணவன் முதலாமிடம். Reviewed by Author on August 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.