அண்மைய செய்திகள்

recent
-

காணிப்பிரச்சினை தொடர்பாக மன்னாரில் விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காணப்பட்டும் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை மன்னார் அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் காணி அமைச்சின் செயலாளர் பங்கு பற்றுதலுடன் மன்னார் மாவட்ட செயலக ஒன்று கூடுதல் மண்டபத்தில் 10 மணியளவில் இடம் பெற்றது

 குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் பிரதேச ரீதியாக காணப்படும் காணிதொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையப்பட்டதுடன் மன்னார் மாந்தை மற்றும் நானாட்டன் மடு பகுதியில் மக்கள் பாவனையில் காணப்படும் காணிகள் பிரதேச செயளாலர்களின் ஆலோசனை இல்லாமல் வனவள திணைக்களம் மற்றும் வனயீவராசிகள் திணைக்களத்தின் கீழ் வர்த்தகமானி அறிவித்தல் ஊடாக கொண்டு வரப்பட்டுள்ளமையால் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் எழுந்துள்ளமை தொடர்பாக பிரதேச செயலாளர்கள் ஊடாக காணி அமைச்சின் செயலாளரின் கவனத்திற்க்கு கொண்டுவரப்பட்டது அதே நேரம் அரச காணிகளில் வசிக்கும் மக்கள் நீண்ட நாட்களாக காணி ஆவணங்கள் கிடைக்காமல் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வது தொடர்பாகவும் காணி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடப்பட்டது 

 இந்த நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அதே நேரம் காணி ஆவணங்கள் பெறுதல் தொடர்பான பிரச்சினைகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக காணி அமைச்சின் செயளாலர் தெரிவித்தார் குறித்த நிகழ்வில் காணி அமைச்சின் செயலாளர் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் வடமாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஐந்து பிரதேச செயலகங்களையும் சேர்ந்த பிரதேச செயளாலர்கள் உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கதது







காணிப்பிரச்சினை தொடர்பாக மன்னாரில் விசேட கலந்துரையாடல் Reviewed by Author on August 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.