சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றியமைக்கத் தீர்மானம்
இந்த அட்டைகள் ஒஸ்ரியாவில் இருந்து யூரோக்களில் பணம் செலுத்தி இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் திறைசேரியில் யூரோ இல்லாததால் இந்த அட்டைகளின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்படாமல் உள்ளன. வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு மட்டும் அச்சடித்து அவர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அச்சிடப்பட்ட அட்டைகளை இறக்குமதி செய்ய அதிக செலவாகும் என்பதால், அதில் பாதிக்கும் குறைவான விலையில் சைபர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றியமைக்கத் தீர்மானம்
Reviewed by Author
on
September 03, 2022
Rating:

No comments:
Post a Comment