குருந்தூர் மலை பகுதியில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு! - சார்ள்ஸ் எம்.பி. நேரில் விஜயம்
இதன்போது உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்பு கொண்ட சார்ள்ஸ் எம்.பி., புதிதாக தொல்பொருள் திணைக்களத்தினர் மக்களின் விவசாய நிலங்களை சுவீகரித்துள்ளனர் எனவும், இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியப்படுத்தியுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இப்படியான செயற்பாடுகள் தொடர்ந்தும் மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் என்றும் அமைச்சருக்கு சார்ள்ஸ் எம்.பி. தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக உடனடியாகத் தான் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
குருந்தூர் மலை பகுதியில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு! - சார்ள்ஸ் எம்.பி. நேரில் விஜயம்
Reviewed by Author
on
September 17, 2022
Rating:

No comments:
Post a Comment