காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்-ஐந்து பேர் படுகாயம்
படகில் இருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதில் ராஜ்குமார் ,தண்டபாணி, மதன், அருண்குமார் மாணிக்கவேல் சூர்யா ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
இன்று (5) கரை திரும்பிய அவர்கள் காரைக்காலில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் படகின் உரிமையாளர் ராஜ் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சை க்கு கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக காரைக்கால் மீன்வளத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் காரைக்கால் பகுதி மீனவர்கள் இடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்-ஐந்து பேர் படுகாயம்
Reviewed by Author
on
September 05, 2022
Rating:

No comments:
Post a Comment