அண்மைய செய்திகள்

recent
-

நுரைச்சோலையில் 5 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான 155 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் இன்று (23) நுரைச்சோலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கேரள கஞ்சாப் பொருட்களுடன் இரண்டு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான விஜயா என்ற இலங்கை கடற்படை கப்பல் பிரிவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கஞ்சாவை கைப்பற்றியதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. 

 வீடொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அவதானித்து சோதனையிட்ட போது, ​​155 கிலோ 450 கிராம் கேரள கஞ்சா 78 பார்சல்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது; அந்த இடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன , கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ராகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர்கள் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

நுரைச்சோலையில் 5 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது Reviewed by Author on September 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.