அண்மைய செய்திகள்

recent
-

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

நேற்று மாலை அஹுங்கல்ல, போகஹாபிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் காயமடைந்த 29 வயதுடைய அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

 24 வயதுடைய நபர் ஒருவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு 12 போர் துப்பாக்கியால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பொலிஸார் குற்றம் நடந்த இடத்தில் ஐந்து வெற்று தோட்டாக்களை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி Reviewed by Author on September 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.