அண்மைய செய்திகள்

recent
-

கடல் வளங்களை பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு துவிச்சக்கர பவணி மன்னாரில்

இலங்கையில் உள்ள கடல் மற்றும் கடல் வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் முகமாக விழிப்புணர்வு துவிச்சக்கர பவணி ஒசோன் பையோம் அமைப்பின் ஏற்பாட்டில் நாட்டின் கரையோர பகுதிகள் முழுவதும் இடம் பெற்று வருகின்றது குறித்த பவனி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் திருகோணமலை,முல்லைத்தீவை தொடர்ந்து நேற்று யாழ்ப்பாணம் ஊடாக மன்னார் வந்த நிலையில் இன்று திங்கட்கிழமை(5) மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கி செல்கின்றது 

 1300 கிலோமீற்றர் தூரத்தை குறித்த இளைஞர்கள் 11 நாட்களில் கடந்து செல்வதுடன் முக்கிய கரையோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடல் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர் குறித்த துவிச்சக்கரவண்டி பயணம் நாளை புத்தளம் தொடங்கி வென்னப்புவ,கொழும்பு,கிக்கடுவ,ஹம்பாங்தோட்ட,பொத்துவில் சென்று மீண்டும் மட்டக்களப்பை சென்றடைய உள்ளது குறித்த பயணத்தில் பயன்படுத்திய பின்னர் இலகுவாக வீசப்படும் சிறிய அளவிலான பிளாஸ்ரிக்கினால் ஏற்படும் கடல் பாதிப்பு தொடர்பாகவும் குறித்த குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது






கடல் வளங்களை பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு துவிச்சக்கர பவணி மன்னாரில் Reviewed by Author on September 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.