முதலைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொண்டமணாற்றில் வேலி அமைப்பு!
ஆலயத்திற்கு வருவோரில் பெரும்பாலானோர் தொண்டமணாற்றில் நீராடியே முருகனை வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆற்றில் முதலைகளின் நடமாட்டம் காணப்பட்டமையால் ஆற்றில் நீராடுபவர்களை அவதானமாக நீராடுமாறு ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ள நிலையில், தற்போது ஆற்றின் குறுக்காக இரும்பு கம்பினாலான வேலையை அமைத்துள்ளனர்.
வேலி அமைக்கப்பட்டுள்ளமையால் முதலைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளதாகவும், முதலைகளை ஆற்றில் இருந்து வெளியேற்ற பல தரப்புடனும் பேச்சுகளை நடத்தி வருவதாகவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
முதலைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொண்டமணாற்றில் வேலி அமைப்பு!
Reviewed by Author
on
September 05, 2022
Rating:

No comments:
Post a Comment