அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.வைத்தியர்களின் செயல்... குவியும் வாழ்த்துக்கள்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக (19/09/2022) மேற்கொள்ளப்பட்ட மூளையில் ஏற்படும் அனியூரிசம்(Brain aneurysm) எனப்படும் நோயை சீர்செய்யும்(Endovascular Embolization) சிகிச்சை மூலம் எனது தாயார் நலம் பெற்றுள்ளார். இதுவரை காலமும் இந்நோய்க்கு சத்திரசிகிச்சை (Surgical clipping) முறை மூலம் மட்டும் தீர்வை பெற்று வந்த வடக்குகிழக்கு மக்களுக்கு நிச்சயமாக இது ஓர் வரப்பிரசாதம். இரத்தக்குழாயினூடாக மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சையின் மூலம் தொற்று(Infection) ஏற்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதுடன், குறைந்த நாட்களில் நோயாளி வழமை போல் இயங்க முடிகின்றது.

 கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து வந்திருந்த வைத்திய நிபுணர்களின் hos(Interventional radiologists)பிரசன்னத்துடன் இதனை வெற்றிகரமாக நிறைவேற்றிய வைத்திய நிபுணர் Dr.Anton Jenil sir(Con.Interventional radiologist)அவர்களுக்கு எமது வாழ்த்துக்களும் நன்றிகளும். அத்துடன் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் Dr. Athiththan Ponnampalam sir (Con.Neuro surgeon) அவர்கள் எனது தாயாரின் நோய்நிலையை கண்டறிந்தது முதல், இச்சத்திரசிகிச்சையை பரிந்துரைத்தது (Recommendation), சத்திரசிகிச்சைக்கு முந்திய (Pre-op, சத்திரசிகிச்சைக்கு பிந்திய (post-op) காலங்களில் அவரது கரிசனை வார்த்தைகளில் அடங்காது. ஒவ்வொரு நோயாளிக்கும் தன்னாலியன்ற அதியுச்ச சேவையை வழங்க வேண்டும் என்பதில் எப்போதும் சிரத்தை காட்டுகின்றார். 

 இந்த இளம் வைத்திய நிபுணர்களின் சேவை தொடர்ந்தும் எமது மக்களுக்கு கிடைக்க வேண்டுவதுடன், இவர்களுடைய சேவைக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.Thangamuthu Sathiyamoorthy sirஅவர்கட்கும், ஏனைய வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், இணைந்த மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை Jeganathan J Hodson தெரிவித்துள்ளார்.

யாழ்.வைத்தியர்களின் செயல்... குவியும் வாழ்த்துக்கள்! Reviewed by Author on October 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.