அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு - புதூர் பிரதேசத்தில் காணாமால் போன இளைஞன் 5 தினங்களின் பின்னர் அப்பிரதேச மயானத்தில் உருக்குலைந்த நிலையில் இன்றைய தினம் (02-10-2022) சடலமாக கண்டெடுப்பட்டுள்ளது. புதூர் 5ஆம் குறுக்கைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயகரன் அருஜன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 புதூர் மயானத்தில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து தடவியல் பிரிவு பொலிஸார் சகிதம் சென்று விசாரணைகளில் கடந்த மாதம் 27 ம் திகதி செவ்வாய்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய காணாமல் போன இளைஞனே 5 தினங்களின் பின்னர் சடலமாக மீடக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதணைக்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு! Reviewed by Author on October 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.