அண்மைய செய்திகள்

  
-

கடையொன்றில் தீ விபத்து! முதியவர் பலி

மிரிஹான அத்துல்கோட்டே சந்தியில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தீ விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றறுள்ளது. லக்ஷ்மன் சரத் குமார என்ற 63 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தீ ஏற்படும் போது இந்த நபர் கடைக்குள் உறங்கிக்கொண்டிருந்தாகவும் அவர் உறங்கிக்கொண்டிருந்த இடத்திலேயே உயிரிழந்து காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

  விபத்துக்கான காரணம்

உயிரிழந்த இந்த நபர் பிரதேசத்தில் இருக்கும் கடைகளில் கூலி வேலை செய்து வந்தவர் எனவும் சுகவீனமான நிலைமையில் இருந்த அவருக்கு கடை உரிமையாளர் தங்குமிட வசதியை வழங்கி இருந்தார் எனவும் தெரியவந்ததுள்ளது. தீ விபத்துக்கான காரணம் நுளம்பு சுருளா அல்லது மின் ஒழுக்கா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.


கடையொன்றில் தீ விபத்து! முதியவர் பலி Reviewed by Author on October 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.