பாடசாலையில் தவறி விழுந்து மாணவி பலி
புத்தளம், மணல்குன்று பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலையில் நேற்று தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாடசாலை மணியடித்ததையடுத்து சமய அனுஷ்டானத்திற்காக வகுப்பறையில் இருந்து விளையாட்டு மைதானத்தை நோக்கி ஓடும் போது சிறுமி தரையில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம், மனகுண்டுவ பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.
பாடசாலையில் தவறி விழுந்து மாணவி பலி
Reviewed by Author
on
October 11, 2022
Rating:

No comments:
Post a Comment