அண்மைய செய்திகள்

recent
-

ஆசிரியர்கள் – மாணவர்கள் உள்ளிட்ட 45 பேருக்கு குளவி கொட்டு

வவுனியா போகஸ்வெவ மத்திய கல்லூரியின் 45 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போகஸ்வெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். காலை கூட்டத்தின் போது குளவி தாக்குதலுக்கு உள்ளானதாகவும், குளவி கொட்டியதில் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் பதவிய வைத்தியசாலையிலும் ஏனைய மாணவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போகஸ்வெவ இராணுவ முகாமில் இருந்து பேருந்து மூலமாகவும், வவுனியா வைத்தியசாலையிலிருந்து அம்பியூலன்ஸ்கள் மற்றும் சுவாசரிய அம்புலன்ஸ்கள் மூலமாகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் குளவி கொட்டுக்கு இலக்காகி வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட ஏனையவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

.
ஆசிரியர்கள் – மாணவர்கள் உள்ளிட்ட 45 பேருக்கு குளவி கொட்டு Reviewed by Author on October 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.