அண்மைய செய்திகள்

recent
-

6 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை மியான்மருக்கு வழங்குகிறது இலங்கை

பெரும்பாலான மக்கள் நான்காவது அல்லது இரண்டாவது பூஸ்டர் டோஸைப் பெறத் தயங்குவதால், இலங்கை இப்போது சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஃபைசர் தடுப்பூசிகளை மியன்மாருக்கு அனுப்புகிறது. தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெறுவதற்குப் போராடிய இலங்கை, பூஸ்டர் டோஸ்களுக்காக 18 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை வாங்கியது. எவ்வாறாயினும், தினசரி அடிப்படையில் ஒரு சில கொவிட்-19 நோயாளிகள் மட்டுமே கண்டறியப்படுவதால், பல இலங்கையர்கள் தங்கள் முதல் மற்றும் இரண்டாவது ஊக்கிகளை இன்னும் பெறவில்லை.

 9 மில்லியனுக்கும் அதிகமான ஃபைசர் தடுப்பூசிகள் இன்னும் தேங்கிக் கிடக்கின்றன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எஞ்சியிருக்கும் பெரும்பாலான தடுப்பூசிகளை மியன்மாருக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 17.1 மில்லியன் இலங்கையர்கள் முதல் டோஸைப் பெற்ற போதிலும், உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, நான்காவது டோஸ் அல்லது இரண்டாவது பூஸ்டர் டோஸை சுமார் 200,000 பேரே பெற்றுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

6 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை மியான்மருக்கு வழங்குகிறது இலங்கை Reviewed by Author on October 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.