ஆங் சான் சூகியின் சிறை தண்டனை 26 ஆண்டுகளாக நீட்டிப்பு
இது தொடர்பான விசாரணை மியன்மார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த டிசம்பரில் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பிறகு பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை நீட்டித்தது.
தொடர்ந்து, தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூ கிக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், ஆங் சான் சூகி மீதான வேறு வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. இதில், இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை 26ஆக நீடித்துள்ளது.
ஆங் சான் சூகியின் சிறை தண்டனை 26 ஆண்டுகளாக நீட்டிப்பு
Reviewed by Author
on
October 12, 2022
Rating:
Reviewed by Author
on
October 12, 2022
Rating:


No comments:
Post a Comment