அண்மைய செய்திகள்

recent
-

கந்தகாடு கைதி ஒருவர் பலி


கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 10ஆம் திகதி வெலிகந்த திரிகோண கந்த காட்டில் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இவரைச் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பல நாட்களாக உணவருந்தாமல் இருந்த அவர், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (11) இரவு உயிரிழந்துள்ளார். 

 கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் புனர்வாழ்விற்காக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். கடந்த 7ஆம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் ஏற்பட்ட குழப்பத்தின் போது கைதிகள் குழுவொன்று தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
கந்தகாடு கைதி ஒருவர் பலி Reviewed by Author on November 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.