அண்மைய செய்திகள்

recent
-

குட்டி யானை ஒன்று கால்வாயில் சிக்கி உயிரிழந்தது

பொலன்னறுவை அரலகங்வில குடுஓயாவிலிருந்து நீர் கொண்டு செல்லும் மதகு ஒன்றில்7 மாதங்களே ஆன குட்டி யானை ஒன்று சிக்கி உயிரிழந்துள்ளதாக வெஹெரகல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் நேற்று காலை யானைக் கூட்டத்துடன் வயலில் சுற்றித் திரிந்த குட்டி யானை தவறி ஓடையில் விழுந்துள்ளது. பிரதேசவாசிகள் குட்டி யானையைக் காப்பாற்ற முயற்சி செய்த போதிலும், அது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மதகு ஒன்றில் சிக்கிக்கொண்டுள்ளது . 

இதையடுத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை மகாவலி அதிகாரசபையின் விஜயபாகுபுர மகாவலி பிரதேச அலுவலக அதிகாரிகள் பலர், வனவிலங்கு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்று, யானையை மீட்க பல மணிநேரம் முயற்சித்த போதும், சில மணித்தியாலங்களில் யானை உயிரிழந்துள்ளது.

குட்டி யானை ஒன்று கால்வாயில் சிக்கி உயிரிழந்தது Reviewed by Author on November 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.