அண்மைய செய்திகள்

recent
-

வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஊடான பதிவுக்கு தற்காலிகமாக தடை

வௌிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளவர்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஊடாக பதிவு செய்யப்படும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் வீட்டுப் பணிப்பெண்களாகவும் துப்புரவு தொழிலாளர்களாகவும் பதிவுசெய்யப்பட்டு ஓமானில் வேலைக்காக செல்லும் பெண்கள் – சுற்றுலா வீசாவுடன் செல்வதற்கான பதிவுகள் என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாட்டிலிருந்து அனுப்பப்படுவோரின் தகவல்களை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 45 நாட்களுக்குள் அனுப்ப வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தகவல்களை வழங்காது விலகிச் செயற்படுகின்றமை உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு செல்வதற்கான பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 இதேவேளை, வீட்டுவேலை உள்ளிட்ட தொழில்களை தேடிச்செல்லும் இலங்கைப் பெண்கள் ஓமானில் காட்சிப்படுத்தப்பட்டு பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்கப்படும் வியாபாரம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர்கள் அடங்கிய குழுவொன்று ஓமானுக்கு சென்று இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். 

 ஓமானில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி சில வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் யுவதிகளையும் பெண்களையும் அந்நாட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா வீசா ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை பின்னர் தெரியவந்துள்ளது. அந்நாட்டில் உள்ள முகவர் நிறுவனங்களில் இவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு வயது மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யப்படுவதாக சமீபத்தில் தகவல்கள் வௌியானதும் குறிப்பிடத்தக்கது.




வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஊடான பதிவுக்கு தற்காலிகமாக தடை Reviewed by Author on November 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.