மன்னார் மறை மாவட்டத்தில் ஆத்துமாக்கள் தினம் இன்று அனுஷ்டிப்பு
-மன்னார் பேசாலையில் உள்ள கத்தோலிக்க சேமக்காலையில் இன்று புதன்கிழமை மாலை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது பேசாலை மக்கள் உயிர் நீத்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
-மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல கத்தோலிக்க மற்றும் பொது சேமக்காலையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
பொருளாதார நெருக்கடி மிகுந்த சூழலிலும், மலர் கொத்துக்கள் வாங்கி, அவற்றை கல்லறைகளில் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களுக்காக மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
மன்னார் மறை மாவட்டத்தில் ஆத்துமாக்கள் தினம் இன்று அனுஷ்டிப்பு
Reviewed by Author
on
November 02, 2022
Rating:

No comments:
Post a Comment