அண்மைய செய்திகள்

recent
-

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியில் நேற்று இரவு புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் சித்தாண்டியூடாக பயணிக்கையில் தண்டாவளத்திலிருந்து எழுந்த இளைஞன் ஒருவர் புகையிரதத்தால் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலம் அவ்விடத்திலிருந்த வேளை அவரது தந்தையினால் அடையாளம் காணப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சம்பவத்தில் மரணமடைந்த இளைஞன் மாவடிவேம்பை சேர்ந்த பாலச்சந்திரன் சுஜீவகுமார் (32) என அடையாளம் காணப்பட்டது. 

 மது போதையுடன் புகையிரத தண்டாவத்தில் இருந்து எழும்ப முடியாத நிலையில்தான் விபத்தில் பலியாகியுள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர். திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் இன்று காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு சென்று ,சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்தார். மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி Reviewed by Author on December 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.