அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் றோட்டறி கழகத்தினரால் தலைமன்னார் கடற்கரை பகுதி தூய்மையாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு.

மன்னார் றோட்டறி கழகத்தின் தலைவர் ரொபின் ஜெயரூபன் ஏற்பாட்டில் றோட்டறி கழகத்தில் புதிதாக உள்வாங்கப்பட்ட பாடசாலை மாணவர்களை கொண்ட மன்னார் நகர றோட்டறி கழக இளைஞர்களும் தலைமன்னார் பியர் அ.த.க பாடசாலை இன்றக்ட் கழக மாணவர்களும் இணைந்து தலைமன்னார் கிராமம் கடற்கரையோரப் பகுதிகளில் நேற்று (7) காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரை தூய்மையாக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

 இதன் போது பிளாஸ்டிக் கழிவுகள், போத்தல்கள் என்பன அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. இன்றக்ட் கழக பொறுப்பாசிரியர் போல் அவர்களின் தலைமையில் மாணவர்கள் வழி நடத்தப்பட்டனர். அத்துடன் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோ கத்தர்களின் பங்களிப்புடன் குறித்த இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் சிரமதான த்திற்கான பைகள் மற்றும் கையுறைகளை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினர் வழங்கியிருந்த மை குறிப்பிடத்தக்கது.







மன்னார் றோட்டறி கழகத்தினரால் தலைமன்னார் கடற்கரை பகுதி தூய்மையாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு. Reviewed by Author on December 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.