அண்மைய செய்திகள்

recent
-

இன்று(14) நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகள் நடத்த தடை

இன்று(14) நள்ளிரவு முதல் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது. 

 இன்று(14) நள்ளிரவு முதல் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், விரிவுரைகள், செயலமர்வுகள் மற்றும் பரீட்சைக்கான மாதிரி வினா பிரதிகளை விநியோகம் செய்தல், பரீட்சை வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், பிரசுரங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன தெரிவித்துள்ளார்.

இன்று(14) நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகள் நடத்த தடை Reviewed by Author on December 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.