வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பலி
அநுராதபுரத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்த தந்தை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு அநுராதபுரம், எலயாபத்துவ பகுதியில் வீடொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலயாபத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பலி
Reviewed by Author
on
January 27, 2023
Rating:

No comments:
Post a Comment