அண்மைய செய்திகள்

recent
-

விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு உடனடி நிவாரணம்: ஜனாதிபதி பணிப்புரை

விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மாணவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டால் அவர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு விமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறும் ஜனாதிபதி விமானப்படைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


 கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சென்ற பேருந்து மற்றும் வேன் நேற்று (வெள்ளிக்கிழமை) நுவரெலியா – நானுஓயா பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 6 பேரும், விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணித்த 41 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு உடனடி நிவாரணம்: ஜனாதிபதி பணிப்புரை Reviewed by Author on January 21, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.