மன்னாரில் இடம்பெற்ற தொழில் வழிகாட்டலுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு -நூற்றுக்கணக்கான சுய தொழில் முயற்சியாளர்கள் பங்கேற்பு.
சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம் பெற்ற தொழில் வழிகாட்டலுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வில் மன்னார் மாவட்டச் செயலக கைத்தொழில் அபிவிருத்தி சபை அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது மன்னார் மாவட்டத்தில் சுய தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சுய தொழில் உற்பத்தியாளர்கள்,சுய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சுய தொழிலை மேற்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் பல்வேறு விதமான சுய தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சுய தொழில் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு தாம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்ததோடு,அதற்கான தீர்வை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்து அறிந்து கொண்டனர்.
-மேலும் சுய தொழில் உற்பத்தி பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்து தொழில் வழிகாட்டலுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வில் அறிந்து கொண்டுள்ளனர்.
குறித்த கருத்தமர்வில் பெண் சுய தொழில் உற்பத்தியாளர்களே அதிக அளவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இடம்பெற்ற தொழில் வழிகாட்டலுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு -நூற்றுக்கணக்கான சுய தொழில் முயற்சியாளர்கள் பங்கேற்பு.
Reviewed by Author
on
February 07, 2023
Rating:

No comments:
Post a Comment