அண்மைய செய்திகள்

recent
-

ஹவாய் காட்டுத் தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

 ஹவாயில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடுவதற்காக மேலதிக நிபுணர்கள் ஹவாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்டவர்களுக்கான மருத்துவப் பணிகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் அஞ்சப்படும் நிலையில், எதிர்வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 1,000 பேர் இதுவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹவாய் தீவு இதுவரை சந்தித்திராத மிக மோசமான இயற்கை பேரழிவு இதுவென ஆளுநர் ஜோஷ் கிரீன் சுட்டிக்காட்டியுள்ளார்.




ஹவாய் காட்டுத் தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு Reviewed by Author on August 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.