அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளைக்கு புதிய நிருவாகத் தெரிவு.

 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிருவாகத் தெரிவு நேற்றய தினம் (02), கட்சியின் நிர்வாக செயலாளர்   சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் தலைமையில், கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.


மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச கிளை களினதும் நிருவாகிகளின் பிரசன்னத்தோடு நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, மன்னார் மாவட்ட கிளையின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,செயலாளராக சூசையப்பு துரம், பொருளாளராக முன்னாள் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர்  பரஞ்சோதி , துணைத்தலைவராக ஜெயக்குமார் ,துணைச் செயலாளராக திருமதி.செல்வராணி சோசை    ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை மாவட்ட கிளையின் செயற்குழு உறுப்பினர்களாக 10 பெரும் தெரிவு செய்யப்பட்டனர்.







மன்னாரில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளைக்கு புதிய நிருவாகத் தெரிவு. Reviewed by Author on September 03, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.