அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பு போராட்டத்தின் பின் நீதிமன்றத்தில் கறுப்பு மாஸ்க் அணிந்து வழக்குகளில் ஆஜராகும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள்

 முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் தொடர் நீதிமன்ற பணிப்பகிஷ்கரிப்பு  நேற்று  (09) எட்டாவது  நாளாக இடம்பெற்ற நிலையில் 

நேற்று (09)  திங்கட்கிழமை கொழும்பில் உச்சநீதிமன்றம் முன்பாக இடம்பெற்ற  போராட்டத்தை தொடர்ந்து தமது நீதிமன்ற  தொடர் பணிப்பகிஷ்கரிப்பபை நிறுத்தி கறுப்பு மாஸ்க் அணிந்து வழக்குகளில் ஆஜராகவுள்ளதாக முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த.பரஞ்சோதி தெரிவித்தார் .

அந்த வகையிலே இன்று(10) தொடர் பணிப் பகிஸ்கரிப்பை நிறுத்திய முல்லைத்தீவு சட்டத்தரணிகள் முல்லைத்தீவு  நீதிமன்றத்தின் செயல்ப்பாடுகளில்  கறுப்பு மாஸ்க் அணிந்தவாறு இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது 

நீதிபதிக்கான நீதி கோரும் செயற்ப்பாட்டின் ஒரு அங்கமாக இந்த கறுப்பு மாஸ்க் அணிந்தவாறு தாங்கள் இந்த தொடர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் நீதிபதிக்கான உரிய நீதி கிடைக்கப்பெறாத பட்சத்தில் தொடர்ந்தும் பல்வேறு வகையில் தமது போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்







கொழும்பு போராட்டத்தின் பின் நீதிமன்றத்தில் கறுப்பு மாஸ்க் அணிந்து வழக்குகளில் ஆஜராகும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் Reviewed by Author on October 10, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.