அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் தொழில் முனைவோருக்கான ஐந்து நாள் விசேட பயிற்ச்சி வேலைத்திட்டம்

 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் இளம் தொழில் முனைவோருக்கான ஐந்து நாள் வதிவிட  பயிற்சி நெறி ஒன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம் பெற்று வருகிறது


இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது நாடளாவிய ரீதியில் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான இந்த பயிற்சி நெறிகளை முன்னெடுத்து வருகிறது 

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொழில் புரிந்து வருகின்ற தொழில் முயற்சிகளை புதிதாக ஆரம்பிக்க ஆர்வமுள்ள இளைஞர்கள் 35 பேரை தெரிவு செய்து அவர்களுக்கான வியாபார திட்டம் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சி நெறிகள் இந்த ஐந்து நாட்களிலே முன்னெடுக்கப்படுகிறது

இந்த பயிற்சி நெறியின் ஊடாக அவர்கள் தங்களது சுய தொழில்களை முன்னேற்றி தங்களது பொருளாதாரத்தை பலப்படுத்துவதோடு நாட்டினுடைய பொருளாதாரத்திற்கும் அவர்களுடைய பங்களிப்பினை வழங்கக்கூடிய வகையிலே இந்த பயிற்சி நெறியானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று , புதுக்குடியிருப்பு ,ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர்கள் பிரிவுகளையும் உள்ளடக்கிய சுமார் 35 இளைஞர் யுவதிகள் இந்த பயிற்சி நெறியில் கலந்து கொண்டு பயன்பெற்றுவருகின்றனர்

குறித்த பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினுடைய தலைமைக்காரியாலய விவசாய  தொழில் முயற்சி பிரிவினுடைய பிரதிப்பணிப்பாளர் குமுதினி ராஜபக்ஸ மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினுடைய வடமாகாண உதவி பணிப்பாளர் கே. டி. சி காமினி முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினுடைய மாவட்ட உதவி பணிப்பாளர் நா. குகேந்திரா உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு இந்த பயிற்சி வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது 
















முல்லைத்தீவில் தொழில் முனைவோருக்கான ஐந்து நாள் விசேட பயிற்ச்சி வேலைத்திட்டம் Reviewed by Author on October 19, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.