அண்மைய செய்திகள்

recent
-

மதுபோதையில் சென்ற குழு புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்குதல்!

 முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் கார் ஒன்றில் சென்ற நால்வர் அங்கு நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் 


இந்த சம்பவம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 25.03.2024 அன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையில் காரில் சென்ற நான்கு நபர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் சென்று  எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதனை பிடிக்க சென்ற பொது நபர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கூட்டுறவு சங்கத்தின்  எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு தாக்குதல் நடத்தி அச்சுறுத்தலாக அமைந்தது மாத்திரமல்லாமல் எரிபொருள் இறக்குவதற்காக எரிபொருள் தாங்கி திறந்திருந்த நிலையில் இவர்களின் இவ்வாறான செயற்ப்பாடு பாரிய ஆபத்தை உண்டுபண்ணக்கூடியது எனவே இவ்வாறான செயற்ப்பாடுதளை உடன் கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்

இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர் 


மதுபோதையில் சென்ற குழு புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்குதல்! Reviewed by Author on March 26, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.