அண்மைய செய்திகள்

recent
-

உயிரைப் பறித்த குடும்பத் தகராறு

 கம்பளை, கீரப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

 

நேற்று (28) இரவு இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பில் கம்பளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

 

பின்னர் காயமடைந்த நபர் உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

 

இவ்வாறு உயிரிழந்தவர் கீரப்பனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபராவார்.

 

உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், சகோதரியின் மகன் மன்னாக் கத்தியால் தாக்கி இக்கொலையைச் செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






உயிரைப் பறித்த குடும்பத் தகராறு Reviewed by Vijithan on July 29, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.