மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அத்தியட்சகராக வைத்தியர் அஸாத் எம் ஹனீபா நியமனம்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய நிலையில், வைத்திய நிர்வாக சேவை பதவி உயர்வு மற்றும் இடமாற்ற கட்டளையின் பிரகாரம் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா சிரேஷ்ட தரத்துக்கு உள்ளீர்க்க பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைவாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான வைத்தியர் அஸாத் எம் ஹனீபா நேற்று (02) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி சகீலா இஸ்ஸ டீ னிடமிருந்து விடுவிப்பு கடிதத்தினை பெற்றுக்கொண்டார்.
வைத்தியர் அஸாத் எம் ஹனீபா சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி, தரமுயர்த்தல் மற்றும் அதன் வளர்ச்சிப் பாதைக்கு ஆற்றிய அளப்பெரும் சேவைகளை நினைவுகூர்ந்து பாராட்டி பேசிய பிராந்திய பணிப்பாளர் மற்றும் பிரிவு தலைவர்கள் தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.
வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம் ஹனிபா அதிக தேசிய விருதுகளை பெற்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பெயரை புகழ் பூக்கச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment