ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராகக் கறுப்புக் கொடி கட்டி போராட்டம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராகக் கறுப்புக் கொடி கட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டடமொன்றைத் திறந்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகம் மற்றும் மருத்துவ பீட வளாகத்தில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுமார் பன்னிரண்டாயிரம் பணியாளர்கள் தங்களுடைய சம்பள முரண்பாடு மற்றும் நீண்ட காலமாகத் தீர்த்து வைக்கப்படாத பிரச்சினைகள் பலவற்றை தீர்க்கக் கோரி நாடளாவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்துவரும் நேரத்தில், பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான கட்டடமொன்றைக் கோலாகலமாகத் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கையைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.
Reviewed by Author
on
May 24, 2024
Rating:


No comments:
Post a Comment