அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முருங்கன் பகுதியில் 2வது நாளாகவும் காட்டு யானையின் நடமாட்டம் -யானையை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அரச அதிபரிடம் கோரிக்கை.

 மன்னார் முருங்கன் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை (23) காலை இரண்டாவது நாளாகவும் தனித்து திரிகின்ற காட்டு யானையை அங்கிருந்து வெளியேற்ற அரச அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் வர வேண்டும் என அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.


-மன்னார் முருங்கன் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை (23) காலை இரண்டாவது நாளாகவும் தனித்து காட்டு யானை ஒன்று நடமாடி திரிகின்றன.இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.


நேற்றைய தினம் புதன்கிழமை (22) காலையும் குறித்த யானை குறித்த பிரதேசத்தில் நடமாடியது.


இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (23) காலை  மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இரண்டாவது நாளாகவும் நடமாடி திரிகின்றது.மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் குறித்த யானையை காட்டுக்குள் துரத்தி உள்ளனர்.


குறித்த யானையை உடனடியாக குறித்த பகுதியில் இருந்து பிடித்து பிரிதொரு இடத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் உடன் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


குறித்த பிரதேசத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை தற்போது குறித்த யானையினால் ஏற்பட்டுள்ளது.


இவ்விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேசச் செயலாளரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.


குறித்த  விடயம் தொடர்பாக உடனடியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு குறித்த சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தினோம்.


உடனடியாக தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் எதிர் வரும் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்தார்.


குறித்த பகுதி மக்கள் யானையால் பீதி அடைந்துள்ளனர்.தற்போது சிறுபோக செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தென்னை மரங்களை யானை சேதமாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


எனவே மக்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு குறித்த காட்டு யானையை பிடித்து அங்கிருந்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.



மன்னார் முருங்கன் பகுதியில் 2வது நாளாகவும் காட்டு யானையின் நடமாட்டம் -யானையை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அரச அதிபரிடம் கோரிக்கை. Reviewed by Author on May 23, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.