அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் பதற்றம்!

 வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் காணிகளை அளவீடு செய்வதற்காக வருகை தந்த வனவள திணைக்களத்தினர், பொதுமக்களின் எதிர்ப்பினை அடுத்து திருப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இன்று இடம் பெற்றுள்ளது.

1997 ஆம் ஆண்டு கதிர்வேலர் பூவரசங்குளத்திலிருந்து யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் 2011 ஆம் ஆண்டு குறித்த பகுதியில் மீள்குடியேறியிருந்தனர்.

அவர்கள் வசித்த பிரதேசம் அனைத்தும் பற்றை காடுகளாக மாறியுள்ள நிலையில் அவர்கள் குறித்த பகுதியை துப்புரவு செய்து விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் வன வளத்திற்குரிய காணிகள் இருப்பதாக தெரிவித்து வனவள திணைக்களத்தினர் இன்று, அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள குறித்த கிராமத்துக்கு வருகை தந்திருந்தனர்.

அப்போது, அவர்களுக்கு எதிர்ப்பினை வெளியிட்ட பொது மக்கள், தங்களின் கிராமத்துக்குரிய கிராம சேவையாளரை அழைத்து வருமாறு வலியுறுத்தியதுடன், அதன் பின்னரே அளவீட்டுப் பணியை மேற்கொள்ள அனுமதிப்போம் என்றும் தெரிவித்தனர்.

மேலும், தாங்கள் விவசாயம் செய்யும் பகுதியை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது எனவும் மக்கள் குறிப்பிட்டனர். இதனையடுத்து அங்கு வருகை தந்திருந்திருந்த வன வள திணைக்களத்தினர், தாம் செய்மதி ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை சரி பார்ப்பதற்காகவே வந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த சர்ச்சையை அடுத்து வனவளத் திணைக்களத்தினர் குறித்த பகுதியிலிருந்து சென்றதோடு, குழுமிய பொதுமக்களும் கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் பதற்றம்! Reviewed by Author on June 11, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.